உத்தரப்பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் ஒரு பத்திரிகையாளர் மற்றும் அவரது மனைவி அடித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பத்திரிகையாளர் மற்றும் அவரது மனைவி கொடூரமாக கொல்லப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் பிரதான குற்றவாளியான முன்னாள் கிராமத் தலைவர் கெவல் பாஸ்வான் தலைமறைவாக இருப்பதாக கூறியுள்ளனர். உதய் பாஸ்வான் என அடையாளம் காணப்பட்ட இந்த பத்திரிகையாளர் இந்தி நாளிதழின் நிருபராக பணியாற்றியதாக கூறப்படுகிறது. பாஸ்வான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது மனைவி ஷீட்லா செவ்வாய்க்கிழமை வாரணாசியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பலியாகியுள்ளார்.
இந்த சம்பவம், முன்னாள் கிராமத் தலைவருடன் தம்பதியினரின் பழைய பகையை வைத்து இந்த குற்றச்செயல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. உதய் பாஸ்வானுக்கு காவல்துறையினர் உதவியுள்ளனர். அவரை கைது செய்யாமல், தப்பிக்க வழியமைத்து கொடுத்துள்ளனர். இதனால், 3 காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சோன்பத்ரா காவல்துறை கண்காணிப்பாளர் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், இறந்த பத்திரிக்கையாளர் மற்றும், அவரது மனைவி இருவரும் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டிருந்தனர். திரும்பும் நிலையில், குச்சிகளாலும், கம்பிகளாலும் தாக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய போது, உதவி கேட்டுள்ளனர். ஆனால், யாரும் அவர்களுக்கு உதவி செய்யவில்லை.பத்திரிக்கையாளர் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
உதயின் மகன் வினய் பாஸ்வானின் புகாரின் பேரில், முன்னாள் கிராமத் தலைவர் கெவல் பாஸ்வான், அவரது கவுசல்யா, மகன்கள் ஜிதேந்திரா, கபார், சிக்கந்தர் மற்றும் அவரது உதவியாளர் ஏக்லக் ஆலம் ஆகியோருக்கு எதிராக இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.